Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ மீதான வழக்கு விசாரணை தள்ளி வைப்பு

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2015 (03:25 IST)
இந்திய இறையாண்மைக்கு எதிராக, பேசியதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு  ஒத்திவைக்கப்பட்டது.


 

கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள, ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருதரங்கில், ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
 
அவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளாக கூறி, அவர் மீது கியூ பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை, சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை, அதே போல, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஆஜராகவில்லை. ஆனால், வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதி மன்றத்தில் விலக்கு அளிக்க கோரி மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி  கயல்விழி விசாரணையை, ஜூலை 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
 

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

Show comments