Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சிவக்குமாருடன் செல்பி எடுத்தால்...? வைரலாகும் புகைப்படம்

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (19:34 IST)
கடந்த வருடம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகர் சிவக்குமாருடன் ஒரு இளைஞர் செல்பி எடுக்க முயன்றார். அப்போது ஆவேசமடைந்த சிவக்குமார், அந்த இளைஞரின் செல்போனை கீழே தட்டிவிட்டார். இதனால் அந்த இளைஞன் கூட்டத்தில் தன் செல்போனை காணாமல் தேடும் காட்சி பரிதாபமாக இருந்தது.

அதை தள்ளிவிட்ட சிவக்குமாரின் செயலுக்கு பலதரப்பிலிருந்தும் விமர்சனங்கள்  எழுந்தன. பின்னர் சிவக்குமார் அந்த இளைஞனை அழைத்து புது செல்போனை வாங்கிக்கொடுத்தார். இவ்விஷயம் அப்போது வைரலானது. 
 
இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நெட்டிஷன்களால் இந்தப் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
அதில் முதல் படத்தில் மிக உயரமான கட்டிடத்தின் உச்சியில் நின்று ஒருவர் செல்பி எடுக்கிறார். இரண்டாவது படத்தில் மிகக்கொடிய சுறா மீனுடன் ஒருவர் செல்பி எடுக்கிறார். மூன்றாம் படத்தில் காட்டு ராஜாவான சிங்கத்துடன் அமர்ந்து ஒருவர் செல்பி எடுக்கிறார். அடுத்து ஒருவர் சிவக்குமாருடம் செல்பி எடுக்கிறார்.
 
அதாவது மேற்சொன்ன எல்லாவற்றையும் போல நடிகர் சிவக்குமாருடன் செல்பி எடுப்பது எவ்வளவு ஆபத்து என்பதை குறிப்பதாக இப்புகைப்படம் உள்ளது. இந்தப் புகைப்படமும் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments