Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைக்கடிகாரம் புகாரை மோடி நிரூபிக்காவிட்டால் வழக்கு தொடருவோம் - ஞானதேசிகன்

வீரமணி
வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (15:16 IST)
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் சின்னம் பொறித்த கைக்கடிகாரத்தை வழங்கியதாக குற்றம்சாற்றிய நரேந்திர மோடி, அதை நிரூபிக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வருகிற 21 ஆம் தேதி மதியம் ராமநாதபுரம் பார்வதி நகர் டி.பிளாக்கில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இதையொட்டி அங்கு மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை இன்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் பார்வையிட்டார்.
 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மோடி நாலாந்திர பேச்சாளர் போல் பேசியுள்ளார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது பொய்யான குற்றச்சாற்றுகளை கூறியுள்ளார்.
 
ப.சிதம்பரம் கைகடிகாரங்கள் கொடுத்ததாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதனை மோடி நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம். சிறுபான்மையின மக்களுக்கு காங்கிரஸ் பாதுகாப்பாக இருந்து வருகிறது. இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று ஞானதேசிகன் கூறினார்.

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

Show comments