எம்ஜிஆர் தனிக்கட்சி துவங்காமல் இருந்திருந்தால்- கே.சி.பழனிசாமி

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (16:56 IST)
திமுகவிற்கு மாற்று பாஜக என்ற கட்டமைப்பு உருவாக்கப்படுவது அதை தகர்த்து திமுகவிற்கு மாற்று அதிமுக அதிமுகவிற்கு மாற்று திமுக மற்ற கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்கிற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''திமுகவை வளர்த்தது எம்ஜிஆர். திமுகவில் இருந்து வெளியேறி தனி கட்சி துவங்கி தமிழகத்தில் #திமுக VS #அதிமுக என்று இருதுருவ அரசியலை கட்டமைத்ததும் #எம்ஜிஆர் .இதன் மூலம் #திராவிட கலாச்சாரம் வலுப்பெற்றது. ஒருவேளை எம்ஜிஆர் தனிக்கட்சி துவங்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் தேசிய கட்சிகள் நுழைந்திருக்கும்.

அதேபோல் நிகழ்காலத்திலும் திமுக VS அதிமுக என்று இருதுருவ அரசியலை தாங்கி பிடிக்க வேண்டும். இதில் அதிமுக பலவீனமாக இருந்தால் பாஜக எனும் மதவாத சக்தி தமிழகத்தில் ஊடுருவிவிடும். இதை தடுக்க அதிமுக வலிமையாக இருப்பது மிக அவசியம்.

நங்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை எதிர்க்கிறோம் என்பது உதட்டளவில் மட்டும் இல்லாமல் செயலளவில் கடுமையாக அதிமுக பாஜகவை எதிர்த்து களமிறங்க வேண்டும். இன்றைய ஆபத்து திமுகவிற்கு மாற்று பாஜக என்ற கட்டமைப்பு உருவாக்கப்படுவது அதை தகர்த்து திமுகவிற்கு மாற்று அதிமுக அதிமுகவிற்கு மாற்று திமுக மற்ற கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்கிற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் ''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments