Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா இருந்திருந்தால் மத்திய அரசு கவிழ்ந்திருக்கும்: சந்திரபாபு நாயுடு

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (09:02 IST)
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்திருப்பார் என்று ஏற்கனவே நேற்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்த நிலையில் தற்போது ஆந்திரபிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அதே கருத்தை கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா மாநில உரிமைகளில் நம்பிக்கை வைத்திருப்பவர் என்றும், மத்திய அரசால் மாநில உரிமைகள் மறுக்கப்படுவதை அவர் ஒருநாளும் அனுமதிக்க மாட்டார் என்றும், அதேபோல் அண்டை மாநிலத்தின் தார்மீக குரலுக்கு ஆதரவு அளிக்கும் குணம் உடையவர் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார். அவர் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருப்பார். அதனால் முடிவுகள் வேறுமாதிரி இருந்திருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
 
அதேபோல, தி.மு.க. தலைவர் கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்திருந்தாலும், மாநில உரிமைகளை நசுக்கும் மத்திய அரசின் செயற்பாடுகளைக் கண்டித்து, எங்கள் தீர்மானத்திற்கு ஆதரவுகொடுத்திருப்பார் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். 
 
மேலும்  இன்று ஆந்திர மாநிலத்திற்கு மத்திய அரசு செய்யும் துரோகம், நாளை தமிழகத்துக்கு நடக்கலாம் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments