Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கொடுத்தால் ஏற்க தயார் : குஷ்பு அதிரடி

Webdunia
திங்கள், 11 ஜூலை 2016 (18:05 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி தனக்கு கொடுக்கப்பட்டால் ஏற்கத்தயார் என்று நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டது. முடிவில் 8 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றது.
 
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்னும் புதிய தலைவர் அறிவிக்கப்படவில்லை.
 
இந்நிலையில், அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று டெல்லி சென்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து பேசினார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:
 
“நடந்து முடிந்த தேர்தலில், டெபாசிட் கூட வாங்காத தமிழிசை சவுந்தரராஜன் இதுவரை தனது பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. ஆனால், காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பேற்று இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
தமிழக காங்கிரஸ்  கமிட்டி தலைவர் பதவி கொடுத்தால் நான் அதை ஏற்கத் தயார்” என்று அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments