Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் எப்படா செத்தேன்? இரத்தக் கண்ணீர் விடும் சிரிப்பு நடிகர்

நான் எப்படா செத்தேன்? இரத்தக் கண்ணீர் விடும் சிரிப்பு நடிகர்

Webdunia
செவ்வாய், 31 மே 2016 (15:38 IST)
நான் இறக்கவே இல்லை நலமாகவே உள்ளேன் என தன்னிலை விளக்கம் கூறியதோடு, இந்த தவறான தகவலை பரப்பிய நபர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் செந்தில் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார்.
 

 
தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவைக்கு மிகவும் புகழ் பெற்றவர் நடிகர் செந்தில். அரசியல் ஆர்வம் காரணமாக அவர் அதிமுகவில் இணைந்தார். சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என தேர்தல் காலங்களில் அதிமுக பிரச்சார பீரங்கியாக மாறிவிடுவார். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும்கூட அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
 
இந்த நிலையில், நடிகர் செந்தில் இறந்து விட்டதாக கூறி சிலர், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவலை பரவவிட்டனர். ஆனால் தான் சாகவில்லை என செந்தில் அப்போது மறுப்பு தெரிவித்தார்.
 
இந்த நிலையில், நடிகர் செந்தில் மீண்டும் இறந்து விட்ட தகவல் பரவியது. இதில், கடும் அதிர்ச்சியடைந்த நடிகர் செந்தில், மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று காலை புகார் அளித்தார். மேலும், இந்த வதந்திகளுக்கு திமுகவினரே காரணம் என அவர் செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டினார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments