Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''தமிழ்நாட்டு மக்களையும், சென்னையையும் நேசிக்கிறேன்''- பிரதமர் மோடி

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (18:29 IST)
பாரத பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க இன்று தமிழகம் வந்த நிலையில், அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னர், சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, முதல்வர் முக.ஸ்டாலின் , ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர்.

அங்கு,  ரூ.1260 கோடியில் சென்னை சர்வதேச விமான  நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

சென்னை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, ஐ.என்.எஸ் அடையாறு ஹெலிபேட் தளத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சாலைவழியில் சென்றார். அங்கு, சென்னையில் இருந்து, கோவைக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை  பிரதமர் மோடி, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள விவேகானதர் இல்லத்தின் உள்ள விவேகாந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி, சென்னை ராமகிருஷ்ணணா மடத்தின் 150 வது விழாவின் பிரமர் மோடி பேசியதாவது:

‘’நான் தமிழ் நாட்டு மக்களையும் சென்னையையும் நேசிக்கிறேன். தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும், இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் மக்கள் மீது எனக்கு எப்போதும் பற்றிருக்கிறது’’ என்று கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்போது? 2025ஆம் ஆண்டின் அட்டவணை வெளியீடு..!

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments