Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இந்திரா காந்தியின் கட்சியில் இருப்பதற்காக பெருமை அடைகிறேன்’ - நடிகை நக்மா

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2015 (13:56 IST)
இரும்பு பெண்மனி என்று உலகமே போற்றிய இந்திரா காந்தி இருந்த காங்கிரஸ் கட்சியில் இருப்பதற்காக பெருமிதம் அடைவதாக என்று நடிகையும், மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளருமான நக்மா தெரிவித்துள்ளார்.
 

 
நடிகை நக்மா அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழகம், பீகார் மற்றும் புதுவை மாநிலங்களின் மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளார். இதனையடுத்து நடிகை நக்மா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
 
இதன் தொடர்ச்சியாக, கடந்த செவ்வாய்கிழமை அன்று புதுவை காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
 
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நக்மா, ”இரும்பு பெண்மனி என்று உலகமே போற்றிய இந்திரா காந்தி இருந்த காங்கிரஸ் கட்சியில் இருப்பதற்காக பெருமிதம் கொள்வதாகவும், தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து பாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முன் உதாரணமாக காமராஜர் ஆட்சி இருந்ததாகவும், அமைச்சர்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு கக்கன் போன்றோர்கள் இருந்துள்ளதை குறிப்பிட்ட நக்மா, தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

Show comments