Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்ன கோபத்தில் மனைவி தற்கொலை.. அதிர்ச்சியில் கணவரும் தற்கொலை.. திருமணமான 3 மாதத்தில் பரிதாபம்..!

Mahendran
செவ்வாய், 5 மார்ச் 2024 (13:01 IST)
வெளியே அழைத்துச் செல்லவில்லை என்ற கோபத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டதாகவும் மனைவி மரணம் அடைந்த செய்தி கேட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டதாகவும் வெளியாகிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூவரசன் என்ற 26 வயது இளைஞருக்கும் ஐஸ்வர்யா என்ற 25 வயது பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் தனது நெருங்கிய உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு ஐஸ்வர்யா தனது கணவரிடம் கேட்டு இருக்கிறார் 
 
ஆனால் பூவரசன் இப்போது முடியாது இன்னொரு நாள் பார்ப்போம் என்று கூறி வெளியே சென்று உள்ளார். ஆனால் அவர் திரும்பி வந்து பார்த்தபோது வெளியே அழைத்துச் செல்லவில்லை என்ற கோபத்தில் ஐஸ்வர்யா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
 
 இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் பூவரசன் கழிவறையில் உள்ள திராவகத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஒரு சின்ன பிரச்சனை காரணமாக திருமணம் ஆன மூன்றே மாதத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments