Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:28 IST)
புத்தாண்டு விடுமுறைக்காக தென் மாவட்டங்கள் சென்ற பொதுமக்கள் இன்று சென்னை திரும்பி கொண்டிருப்பதை அடுத்து கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால்  தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் சென்றனர் என்பதும் இதனை அடுத்து இன்று முதல் மீண்டும் வேலை நாள் தொடங்க இருப்பதை அடுத்து நேற்று இரவே சென்னை திரும்பி கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்ப மக்கள் காரணமாக செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாகவும் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிற்கிறது என்பதால் அங்கிருந்து  சென்னையில் உள்ள தங்களது இருப்பிடத்திற்கு வருவதற்கும் பொதுமக்கள் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

ராகுல், கார்கே பேசவில்லையா? நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை..!

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் விலை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments