Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியை வைத்து எத்தனை மாதம் ? - வைரைல் புகைப்படம்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (11:38 IST)
சசிகலா தரப்பில் முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தற்போது தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் கடந்த 10 நாட்கள் தமிழக அரசியல் பரபரப்பாகவே இருந்தது. அந்த பரபரப்பு கடந்த 18ம் தேதி முடிவிற்கு வந்தது.
 
2016ம் ஆண்டு ஆட்சி அதிமுக அமைத்தவுடன் ஜெயலலிதா முதல்வரானார். அவரின் மறைவிற்கு பின் ஓ.பன்னீர் செல்வம்  முதல்வரானார். சசிகலா தரப்பிடம் அவருக்கு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி இருக்கிறார். தேர்தல் முடிந்து இதுவரை 3 முதல்வர்கள் மாறிவிட்டார்கள்.


 

 
அவரோடு இது நிற்காது எனவும், விரைவில் சசிகலாவின் உறவினரும், அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தினகரனை முதல்வராக முன்னிறுத்தும் வேலை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், இது பற்றி தமிழகத்தின் ஏதே ஒரு இடத்தில் ஒரு பலகை வைக்கப்பட்டுள்ளது அதில் “ டெட் பாடியை வைத்து 3 மாதம், எடப்பாடியை வைத்து எத்தனை மாதம்?” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
 
அதாவது, ஜெ.இறந்த நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும், 3 மாதம் மக்களை ஏமாற்றினார்கள் என்ற செய்தி இன்னும் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில்தான், இப்படி ஒரு போர்டை அந்த ஊர் மக்கள் வைத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments