தூய்மை பணிகளை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கே கொடுக்க வேண்டுமா? நீதிமன்றம் மறுப்பு

Mahendran
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (15:46 IST)
தூய்மை பணிகளை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கே கொடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
மதுரை மாநகராட்சியில் தனியாருக்கு கொடுக்கப்பட்ட துப்புரவு ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தினருக்கே இப்பணியை வழங்க வேண்டும் என செல்வகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
 
தூய்மை பணிகளை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கே கொடுக்க வேண்டும் என எப்படி உத்தரவிட முடியும்? அது ஜனநாயகத்திற்கு எதிரானது. அப்படி ஒரு உத்தரவை வழங்க இயலாது  என நீதிபதிகள் தெரிவித்தனர்,
 
மேலும் மனுவில் அந்த கோரிக்கையை திருத்தம் செய்து தாக்கல் செய்வதாக மனுதாரர் உறுதியளிக்க, விசாரணை 2 வாரத்திற்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments