Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து.. அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்து.. ஓசூர் அருகே பயங்கரம்..!

Siva
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (18:10 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து என அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி  தேசிய நெடுஞ்சாலை நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஓசூர் அருகே பேரண்டபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 8 கார்கள் நான்கு லாரிகள் மற்றும் ஒரு பேருந்து என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

அடுத்தடுத்து 13 வாகனங்கள் ஒரே சாலையில் மோதிக்கொண்டதை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை இந்த விபத்தில் உயிரிழந்தவர் குறித்த எந்த தகவலும் இல்லை என்பது ஆறுதலாக இருந்தாலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய நிலை என்ன என்பதை இன்னும் சில மணி நேரத்தில் மருத்துவர்கள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்


Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments