Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதி மாணவர்கள் புது பாணி போராட்டம் - பெட்டி படுக்கைகள் வீதிக்கு வந்தன

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (01:38 IST)
விடுதியில் சரியான வசதிகள் இல்லாததை கண்டித்து, விடுதி மாணவர்கள் பெட்டி படுக்கைகள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர்.
 

 
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி விடுதியில் ஆதிதிராவிட மாணவர்கள் 55க்கும் மேற்பட்டவர்கள் தங்கி படிக்கிறார்கள். இங்குள்ள குடிநீர் பம்பு அடிக்கடி பழுது ஏற்படுகிறது. உணவும் முறையாக வழங்குவதில்லை. இது குறித்து சம்பந்தபட்டவர்களிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
 
இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள் தங்களுடைய பெட்டி, படுக்கையை எடுத்துக்கொண்டு விடுதி வாயிலில் இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனையறிந்து ஆதிதிராவிட நலத்துறை உதவி பொறியாளர் மலர்விழி, கோட்டாட்சியரின் உதவியாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
 
அப்போது, 20 நாட்களில் புதிய போர் அமைத்து குடிநீர் பிரச்சனை தீக்கப்படும் என்றும், உணவும் தரமாக முறையாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக விளக்கிக் கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments