Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுரவ கொலை: தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? திருமாவளவன் கேள்வி

Webdunia
வியாழன், 9 ஜூலை 2015 (22:45 IST)
தமிழகத்தில் நடைபெற்று வரும் கவுரவ கொலைகளை தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
ரெட்டைமலை சீனிவாசனின் 157ஆவது பிறந்தநாள் விழா மற்றும் விடுதலை சிறுத்தைகளின் வெள்ளி விழா பொதுக் கூட்டம் மதுராந்தகம் அருகே நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
சமீப காலமாக தமிழகத்தில் சாதி கவுரவ படுகொலை அரங்கேறி வருகிறது. இதனை கண்டிக்கும் விதமாகவும், கவுரவ கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், படுகொலைகளுக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வரும் 13ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் பெறும்.
 
மத்திய அரசு கவுரவ கொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்தியாவில் உள்ள 21 மாநிலங்கள் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழக அரசு மட்டும் இதுவரை பரிந்துரைக்கவில்லை.
 
மத்திய பிரதேசத்தில தேர்வு வாரிய ஊழல் முறைகேடுகள் இதுவரையில் இருந்த ஊழல்களையெல்லாம் மிஞ்சிய மிக மோசமான ஊழல். இது தொடர்பாக 46 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றார்.
 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments