Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (18:14 IST)
இன்று, சென்னை வந்த பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு  பாஜகவினரும் அதிமுகவினரும் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் தற்போது சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னையில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத்திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அமித் ஷா, உலகிலேயே மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழியில் எனக்குத் தெரியாது என்பதால் என்னால் பேசமுடியவில்லை. அதற்கான நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகம் அனைத்து திட்டங்களிலும் முன்னிலை வகிக்கிறது எனவும், கொரோனா தடுப்புப் பணிகளில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது எனவும்,  கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிசுக்களுகு தமிழகத்தைப் போல் வேறு எந்த  மாநிலமும் பாதுகாப்பு வழங்கவில்லை எனப் புழகராம் சூட்டியுள்ளார்.

இதற்கு முன் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும்  துணைமுதல்வர் ஒ. பன்னீசெல்வம் இருவரும் வரும் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments