Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”திமுகவில் இருந்து இந்து உணர்வாளர்கள் வெளியேற வேண்டும்’’ - எச்.ராஜா அதிரடி

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2016 (23:09 IST)
இந்து மதத்தை விமர்சிப்பதால் அவரது கட்சியில் உள்ள இந்து உணர்வாளர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.


 

இது குறித்து எச்.ராஜா மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”தபால் நிலையங்களில் கங்கை நீர் விநியோகிக்கப்படுவது குறித்து திமுக தலைவர் கலைஞர் கிண்டலடித்துள்ளார். இந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து கிண்டலடிக்கும் அவர், மற்ற மதத்தினரின் செயல்பாட்டை பற்றி வாய் திறப்பதில்லை.
 
மசூதிக்கு, தமிழக அரசு அரிசி வழங்குவது குறித்து கலைஞரால் விமர்சிக்க முடியுமா? தபால் நிலையங்களில் கடிதம் அனுப்புவது குறைந்து விட்டது. இதனால் தபால் நிலைய பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கும் வகையில் சில திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
 
ஆனால் இதை கருத்தில் கொள்ளாமல் கலைஞர் விமர்சிப்பது சரியல்ல. தொடர்ந்து அவர் இந்து மதத்தை விமர்சிப்பதால் அவரது கட்சியில் உள்ள இந்து உணர்வாளர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்’’ என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments