Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியரைத் தாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள் அதிரடி நீக்கம்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2015 (11:31 IST)
கயத்தாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் பள்ளியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்யப்பட்டனர்.

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில், இம்மாதம் 7ம் தேதி +2 மாணவர்கள் சிலர் பள்ளியில் உள்ள தடுப்புச்சுவரை இடித்து விட்டனர். இதையடுத்து பள்ளி தலைமையாசிரியை சுதா கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர்   சௌந்தரநாயகி புதன்கிழமை அன்று பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்த்தார்.

இந்த கூட்டத்திற்கு சில மாணவர்கள் செல்லவில்லை என்று தெரிகிறது. இதனால் இப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அந்த மாணவர்களை கண்டித்திருக்கிறார். அதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு மாணவர்கள் உடற்கல்வி ஆசிரியரை தாக்கியுள்ளனர். அதையடுத்து அந்த மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரனை  நடத்திய  மாவட்ட அலுவலர் அந்த இரண்டு மாணவர்களையும் பள்ளியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.

இச் சம்பவம் கயத்தாறில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments