Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்வு

Webdunia
சனி, 5 டிசம்பர் 2015 (12:47 IST)
கனமழை காரணமக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 


 
 
மூன்று நாட்களுக்கு முன் பெய்த கனமழையால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரவேண்டிய காய்கறிகள் சரியாக வரவில்லை. பொதுமாக தினசரி 300 லாரிகளில் காய்கறிகள் வரும். ஆனால் மழை காரணமாக வெறும் 110 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வந்துள்ளது.
 
அதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மழை காரணமாக மூன்று நாட்களாக வீட்டிற்குள் முடங்கிய சென்னை வாசிகள் இன்று கோயம்பேட்டில் காய்கறிகளை வாங்க குவிந்தனர். ஆனால் காய்கறிகளின் விலையை கேட்டதும் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்று காலை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.120, முருங்கைக்காய் ரூ. 160, பாகற்காய் ரூ. 100, கோவக்காய் ரூ. 60, முட்டை கோஸ் ரூ. 40, பச்சை மிளகாய் ரூ. 50, மல்லி, புதினா ஒரு கட்டு ரூ. 15–க்கு என்று விற்பனையானது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments