Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே ரூமில் தங்குவதில் என்ன தவறு?? நீதிமன்றம் கேள்வி

Arun Prasath
சனி, 7 டிசம்பர் 2019 (16:13 IST)
திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறிருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததால், அந்த ஹோட்டல் போலீஸாராலும் வருவாய் துறையினராலும் மூடப்பட்டது. ஹோட்டல் மூடப்பட்டதை எதிர்த்து ஹோட்டலின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ”இந்த ஹோட்டல் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்குவதால் மூடப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்க கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லை. அப்படி இருக்கையில் இதில் என்ன தவறு இருக்கிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமணம் ஆகாத தம்பதிகள் சேர்ந்து வாழ்வதில் எவ்வித குற்றமும் இல்லை எனும் போது, இருவரும் சேர்ந்து ஒரே அறையில் தங்குவதில் எவ்வாறு குற்றமாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட ஹோட்டலை இரண்டு நாட்களுக்குள் திறக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments