Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூரில் மீண்டும் கனமழை எச்சரிக்கை : ராணுவம் விரைந்தது

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (16:35 IST)
கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையை அடுத்து முன்னேற்பாடாக மீட்பு பணிக்காக இந்திய ராணுவம் அங்கு விரைந்துள்ளது.


 

 
 
சமீபமாக பெய்த  கனமழையால் கடலூர் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் மழையால் பலியானதாக தெரிகிறது. நிறைய பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் படையினர், போலிசார் மீட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர். 
 
நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்தது. அதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 செ.மீ மழை பெய்துள்ளது. 
 
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளத்தால், அதனை சுற்றியுள்ள கிராமத்திலுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். 
 
கடலூரில் தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments