Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீர் மழை.. குளிர்ந்த தட்பவெப்பத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Siva
செவ்வாய், 23 ஜூலை 2024 (21:52 IST)
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பையும் மீறி திடீரென சென்னையில் மழை பெய்ததால் சென்னையில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தமிழகத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் திடீர் என இன்று மழை பெய்தது. தேனாம்பேட்டை, அண்ணா சாலை, தியாகராய நகர், வடபழனி, அண்ணா நகர், நந்தனம், நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம், மீனம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரைமணி நேரத்துக்கு மேல் கன மழை பெய்தது.
 
சில இடங்களில் ஒரு மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையில் பெய்த கனமழை காரணமாக தற்போது குளிர்ந்த தட்பவெட்ப நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டரை கடத்தி 6 கோடி கேட்ட கடத்தல்காரர்கள்.. கைக்காசு 300 ரூபாய் செலவானது தான் மிச்சம்.!

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments