Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பல இடங்களில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (16:30 IST)
சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று மதியம் மூன்று மணி அளவில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. தேனாம்பேட்டை அண்ணா சாலை தி.நகர் சைதாப்பேட்டை மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
அதேபோல் நுங்கம்பாக்கத்திலும் கனமழை பெய்து வருவதாகவும் இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
சென்னையில் இன்று காலையில் லேசான வெயில் அடித்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments