சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யும்: வானிலை ஆய்வாளர் கணிப்பு..!

Siva
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (15:37 IST)
சென்னையில் அடுத்த மூன்று நாட்களில் 47 சென்டிமீட்டர் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னையில் அடுத்த மூன்று நாட்களில் 47 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்றும், குறிப்பாக இன்று நள்ளிரவு லேசான மழை பெய்ய ஆரம்பித்து, நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் கணித்துள்ளார்.  நாளை 4.5 செமீ, நாளை மறுநாள் 26.5 செமீ,  16ஆம் தேதி 15.5 செமீ, மழைக்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், இன்று மதுரை, தேனி, விருதுநகர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
மேலும் சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments