Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
திங்கள், 8 மே 2023 (16:40 IST)
இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் கன மழை பெய்யப் போகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளதை அடுத்து அது மேலும் நாளை வலுப்பெற்று நாளை மறுநாள் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள தென்காசி சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments