Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
திங்கள், 8 மே 2023 (16:40 IST)
இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் கன மழை பெய்யப் போகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளதை அடுத்து அது மேலும் நாளை வலுப்பெற்று நாளை மறுநாள் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள தென்காசி சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments