Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டாளியை கொடூரமாக தாக்கி சாக்கடையில் மறைத்த திருட்டு கும்பல்

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (14:56 IST)
நாகர்கோவில் பஸ் நிலையம் அருகே திருடிய பணத்தை பங்கு போடும் போது ஏற்பட்ட தகராறில் தன்னுடைய கூட்டாளியை கம்பியால் தக்கி அப்பகுதியில் உள்ள சாக்கடையில் மறைத்து வைத்து விட்டு தப்பியோடிய திருட்டு கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

 
நாகர்கோவில் பஸ் நிலையம் அருகே, பலத்த காயங்களுடன் ஒருவருடைய உடல் சாக்கடையில் இருப்பதாக பொதுமக்ள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர், இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வாலிபரை சாக்கடையில் இருந்து வெளியே எடுத்தனர்.

அப்போது, அவருக்கு உயிர் இருப்பதை அறிந்த போலீஸார், நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீஸார், திருடிய பணத்தை பங்கு போடும் ஏற்பட்ட தகராறில், 4 பேர் கொண்ட கும்பல் தன்னுடைய கூட்டாளியை கடுமையாக தாக்கி சாக்கடையில் திணித்து வைத்து விட்டு தப்பியோடி விட்டதாக தெரிவித்தனர். மேலும், அந்த கும்பல் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் குறிப்பிட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலை சேர்ந்த நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

Show comments