Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 2, 3 தேதிகளில் வெப்ப அலை வீசும்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Siva
திங்கள், 29 ஏப்ரல் 2024 (13:37 IST)
மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதால் இன்னும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவாகி வரும் நிலையில் மே 2, 3 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் மே 2, 3 தேதிகளில் வெப்ப அலை வீசும் என்றும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் என எட்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களில் பிற்பகலில் 30% முதல் 50 சதவீதமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments