Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 மணி நேரத்திற்குள் புயல்; துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:54 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையாக கடந்த மாதம் முதலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் தற்போது புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயலாக உருமாற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, நாகப்பட்டிணம், சென்னை உட்பட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனினும் இந்த புயல் ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments