Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ரத்து.. எந்த மாவட்டத்தில்?

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (08:01 IST)
நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற இருக்கும் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்ட பலத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக மாணவ மாணவிகள் தங்கள் நோட்டு புத்தகத்தை இழந்து உள்ளார்கள் என்பதும்  பல மாணவர்கள் தங்குவதற்கு வீடு இல்லாத நிலையில் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் இன்று அரையாண்டு தேர்வு தொடங்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பல பள்ளிகள் சேதமடைந்துள்ளதுடன் முகாம்கள் செயல்படுவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்,.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments