Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறு வழியில்லை: தூத்துகுடி துப்பாக்கி சூடு குறித்து எச்.ராஜா

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (17:29 IST)
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 பேர் பலியான விவகாரம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தமிழக அரசுக்கும் காவல்துறையினர்களுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காவல்துறை துப்பாக்கி சூட்டை தவிர்த்திருக்கலாம் என்றும் அல்லது கலவரத்தை அடக்க ரப்பர் குண்டுகள் பயன்படுத்தி சுட்டிருந்தால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டிகே ரெங்கராஜன் என்பவர் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு டுவீட்டை பதிவு செய்தார். இந்த டுவீட்டுக்கு பதிலளித்துள்ளா பாஜகவின் எச்.ராஜா, 'போராட்டம் கலவரமாக மாறும் போது வேறு வழி இல்லை' என்று பதிவு செய்துள்ளார். எச்.ராஜாவின் இந்த பதிவிற்கு டுவிட்டரில் கடும் கண்டனங்களை பொதுமக்கள் பதிவு செய்து வருகின்றனர்.
 
99 நாட்களாக அமைதியாக நடந்த போராட்டத்தில் இன்று மட்டும் வன்முறை வெடித்தது ஏன்? என்ற கேள்வியே அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

Exit Poll 2024 Live: இந்தியாவில் ஆட்சியமைக்கப்போவது யார்? மீண்டும் பாஜகவா? கருத்துக்கணிப்பு முடிவுகள்!

TN Lok Sabha Election result 2024 Live: மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 நேரலை

Exit Poll 2024 Live.. தமிழகத்தில் எக்சிட் போல் முடிவுகள்..!

திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, டிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் காணொலி வாயிலாக திமுக முகவர்களுக்கு ஆலோசனை!

டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை.. யார் யார் கலந்து கொண்டார்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments