Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராயப்பேட்டை பாலத்தில் தொங்கவிடப்பட்ட ஹெச்.ரஜாவின் உருவ பொம்மை..

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (10:08 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ள கருத்து திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ஹெச். ராஜா  தனது டிவிட்டர் பக்கத்தில் “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே” எனப் பதிவிட்டுள்ளார்.  
 
ஹெச்.ராஜாவின் இந்த பதிவு திமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. இது மிகவும் கீழ்த்தரமான பதிவு என அவருக்கு எதிராக பலரும் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், #எச்சபொறுக்கிராஜா என்கிற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். பலரும் இதை பயன்படுத்தியதில், டிவிட்டரில் இந்த ஹேஸ்டேக் நேற்று டிரெண்டிங்கில் இருந்தது.
 
இந்நிலையில், கொதிப்படைந்த சிலர் சென்னை ராயப்பேட்டௌ மேம்பாலத்தின் ஹெச்.ராஜாவின் உருவப்படத்தை கட்டி சிலர் தொங்கவிட்டுள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments