Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இது ஹிந்து மதத்தின் மீது தொடுத்திருக்கின்ற யுத்தம்” ஹெச் ராஜா பேட்டி

Arun Prasath
வெள்ளி, 31 ஜனவரி 2020 (15:51 IST)
தஞ்சாவூர் பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்யவேண்டும் என தமிழ் அமைப்புகள் போராடி வந்ததை குறித்து பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டியளித்துள்ளார்.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என தமிழ் அமைப்புகள் போராடி வந்ததை தொடர்ந்து, தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு செய்யலாம் என இந்து அறநிலையத்துறையும் தமிழக அரசும் கூறியது.

இதனிடையே குடமுழுக்கு தமிழில் நடத்தவேண்டும் என தமிழ் அமைப்புகள் போராடியதை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “ஹிந்து மதத்தின் அடையாளமாக பொட்டு இருக்கையில் , அதனை அழித்த ஹிந்து விரோதிகளுக்கு குடமுழுக்கு விஷயத்தில் தலையிட என்ன உரிமை இருக்கிறது?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் அப்பேட்டியில், “இது ஹிந்துக்கள் அல்லாதவர்கள் ஹிந்து மதத்தின் மீது தொடுத்திருக்கின்ற யுத்தம், இதனை முழு சக்தியோடு எதிர்கொள்ள ஹிந்து மதம் தயாராக இருக்கிறது” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments