Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் களத்துல இறங்குனா அதகளமாகிறும்... எச்.ராஜா வார்னிங்!!

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (16:32 IST)
தமிழ்நாடு அமைதி மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக அமைதியாக இருக்கிறோம் என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேசியுள்ளார். 
 
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் திடீரென கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் எச்.ராஜா. அவர் கூறியதாவது,  குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் நாட்டில் உள்ள எந்த முஸ்லீமுக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் முஸ்லீம்களுக்கு ஆபத்து இருப்பது போல் திமுக உள்ளிட்ட கட்சிகள் தூண்டி விடுகின்றன.
 
இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்டு திமுக பிண அரசியல் செய்கிறது.  இவ்வளவு பேசுகிற ஸ்டாலின் ஏன் வண்ணாரப்பேட்டைக்கு வரவில்லை, அவர்கள் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். இந்து விரோத கட்சி திமுக போல் மறு தரப்பு தூண்டிவிட்டால் என்னாகும்? தமிழ்நாடு அமைதி மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக அமைதியாக இருக்கிறோம் என எச்சரிக்கை விடுக்கும் தோணியில் பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments