Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவினரின் இந்தி பள்ளிகளை மூடும் வரை போராட்டம்: எச்.ராஜா

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (21:07 IST)
ஒருபக்கம் இந்தியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று கோஷமிடும் திமுக, இன்னொரு பக்கம் தனியார் பள்ளிகளை நடத்தி கொண்டு அதில் இந்தியை பிரதான மொழியாக கற்று தருகிறது. இதனை தட்டி கேட்டால் அது தனியார்கள் நடத்தும் பள்ளி, திமுக நடத்தும் பள்ளி அல்ல என்ற விளக்கம் வேறு. அப்படியென்றால் திமுக வேறு, திமுகவினர் வேறா? என்ற கேள்வியும் எழுகிறது
 
இந்த நிலையில் சமீபத்தில் திமுகவினர் நடத்தும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளின் பட்டியலை வெளியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அந்த பள்ளிகளை மூடும்வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
திமுக தலைவர்கள் இந்தி பள்ளிகளை நடத்திக் கொண்டிருப்பதை விவாதிக்காத ஊடகம் மீண்டும் மீண்டும் இந்தி திணிப்பு என்று விவாதிப்பது மக்களை திசை திருப்பவே. திமுகவினரின் இந்தி பள்ளிகளை மூடும் வரை தொடர் போராட்டம் தான் இந்த பொய்யர்களின் உள்நோக்கம் கொண்ட பிரச்சாரத்திற்கு தீர்வு' என்று பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments