Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாமி மலையில் எச்.ராஜா அரசியல் ஆருடம்: பாஜகவின் வெற்றி நிலவரம் எப்படி?

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (17:04 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு என அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்து இப்போது பிரச்சாரம் குறித்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. அவர் பேசியது பின்வருமாறு, 
 
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 360 தொகுதியில் வெற்றி பெறும். அதேபோல் பாஜக கூட்டணி தமிழகத்தில் 35 இடங்களில் வெற்றி பெறும்.
தமிழகத்தில் விரைவில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்வார். வங்கி மூலம் பல கோடி பேருக்கு கடன் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என தெரிவித்தார். 
 
மேலும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து தொகுதிகளில், சிவகங்கை தொகுதியில் எச்.ராஜா போட்டியிட வாய்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments