Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டர் சட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி: மதுரை இளைஞரின் அதிரடி புகார்

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (04:30 IST)
ஒரு போராட்டத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டித்தான் மாணவி வளர்மதியும் பேராசிரியர் ஜெயராமனும் கைது செய்யப்பட்டார்கள். அப்படி பார்த்தால் மாணவர்களின் போராட்டத்தை தூண்டியதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகள் தான். எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள் என மதுரை மாவட்ட கலெக்டரிடம் இளைஞர்கள் நேற்று மனு ஒன்றை கொடுத்து அதிர வைத்தார்கள்.



 
 
விவசாயிகளின் நிலம் பாதிப்பு அடையக்கூடாது என்ற பொதுப்பிரச்சனைக்காக போராடிய பேராசிரியர் ஜெயராமன், மாணவி வளர்மதி ஆகியோர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சரியென்றால் மதுக்கடை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற  விவசாயத்தை அழிக்கும் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கும் முதல்வரை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கூடாது என்பது தான் இந்த இளைஞர்களின் கேள்வி.
 
மதுரை கலெக்டர் இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பாரா? என்பது சந்தேகமே! இருப்பினும் மதுரை இளைஞர்களின் தைரியத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்.. ஆனால் தாக்கியது ஈரான் அல்ல.. இன்னொரு நாடு. அதிர்ச்சி தகவல்..!

போன் செய்தால் போதும் வீட்டுக்கே வரும் பிஎஸ்என்எல் சிம்.. ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியா?

அடுத்த கட்டுரையில்
Show comments