Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி வளாகத்தில் ஊஞ்சலாடிய ஆளுனர் தமிழிசை: வைரல் புகைப்படம்!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (18:13 IST)
கல்லூரி வளாகத்தில் ஊஞ்சலாடிய ஆளுனர் தமிழிசை: வைரல் புகைப்படம்!
புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கல்லூரி வளாகத்தில் ஊஞ்சலாடிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக கடந்த சில வருடங்களுக்கு முன் நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து கூடுதலாக புதுவை மாநில துணை நிலை ஆளுநர் ஆகவும் அவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
புதுச்சேரியில் அவர் ஆளுநராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும், குறிப்பாக புதுவை சட்டமன்றத்தில் வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக ஆளுநர் ஒருவர் தமிழில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் சென்றார். அங்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா விதிமுறைகளைக் கடைபிடித்தார்களா? என்பதை ஆய்வு செய்த ஆளுநர் தமிழிசை அதன் பின் அங்கிருந்த ஊஞ்சல் ஒன்றில் ஜாலியாக ஆடினார். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.. விமான சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு குறித்து ஈபிஎஸ்..!

விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு: முதலமைச்சர் பதில் சொல்லியே ஆக வேண்டும்: அண்ணாமலை..

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழப்பு: சிகிச்சையில் 93 பேர்..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு: அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments