Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் நீட் விலக்கு மசோதா! – ஆளுனர் திடீர் முடிவு?

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (08:29 IST)
தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுனர் குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்திற்கு நீட் மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக சட்டமன்றம் மசோதா நிறைவேற்றி ஆளுனர் ஒப்புதலுக்கு அளித்தது. ஆனால் ஆளுனர் தரப்பில் மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

இதனால் சமீபத்தில் ஆளுனர் மாளிகையில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில் ஆளுனர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழக சட்டமன்றத்திற்கு அவர் தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments