Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு; அரசு வேலை: கிடைக்குமா?

ராம்குமார் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு; அரசு வேலை: கிடைக்குமா?

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (10:01 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ராம்குமார் கடந்த ஞாயிறு அன்று தற்கொலை செய்துகொண்டு இறந்ததாக தகவல் கூறப்பட்டது. இந்த மரணம் தற்கொலையா, கொலையா என்பதை தீர்மாணிக்கும் பிரேத பரிசோதனை இன்னமும் நடைபெறவில்லை.


 
 
இதனையடுத்து, இந்த மரணம் தற்கொலை அல்ல, கொலை தான் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ராம்குமார் குற்றவாளி இல்லை, நிரபராதி தான் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
 
இந்நிலையில் அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். அவை, ராம்குமார் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ராம்குமாரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். ராம்குமார் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
 
மேலும் சுவாதியை கொலை செய்த உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்னர் அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments