Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைக்செட் குடோனில் திடீர் தீ - ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

J.Durai
புதன், 1 மே 2024 (15:21 IST)
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கல்வேலிபட்டியை சேர்ந்த நாகராஜ்(49) இவர் மைக்செட், கல்யாண,அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மேடை அலங்காரம் செய்வது உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். 
 
இவர் நத்தம் மீனாட்சிபுரத்தில்  தனியார் இடத்தில் தகர செட்டு அமைத்து அந்த பொருட்களை அங்கு வைத்து வருகிறார்.
 
விழா காலங்களில்  பயன்படுத்தப்படும் கலைநயம் மிக்க அலங்கார பொருட்கள், மைக் செட்டுகள்,கூம்பு வடிவ குழாய்கள் மைக் செட் பாக்ஸ்கள் டியூப் லைட்டுகள், சீரியல் லைட்டுகள் மற்றும் தளவாடப் பொருள்கள் ஆகியவை மைக்செட் கடையில் வைத்திருந்தார்  திங்கட்கிழமை இரவு வரை அங்கு இருந்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
 
இந்நிலையில் திடீரென இரவு சுமார் 12.20 மணியளவில் தீப்பற்றியது. உடன் அக்கம் பக்கத்தினர்  நத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையில் வீரர்கள் குழுவினர்  தீயை 2 மணி நேரம் போராடி அணைத்தனர். 
 
குடோனில் இருந்த சுமார்  ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. 
 
தீ பிடித்ததற்கான காரணம்  மின்கசிவா அல்லது வேறு  என்னவாக இருக்கும் என்பது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments