Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த மருந்தின் பெயர் கூடத் தெரியாது – கோமதி மாரிமுத்து பேட்டி !

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (11:48 IST)
ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து மற்றுமொரு சோதனைக்காக கத்தார் சென்றுள்ளார்.

கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டபந்தய பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து. தமிழகத்தைச் சேர்ந்த அவருக்கு இந்தியா முழுவதும் பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில் அவர் போட்டிகளின் போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தடைசெய்யப்பட்ட நாண்ட்ரோலான் எனப்படும் மருந்தை அவர் உபயோகப்படுத்தியதாக அவரது சிறுநீர் சோதனை (.A சாம்பிள்) சோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆசிய தடகள சம்மேளனம் தெரிவித்தது. இதனால் அவருக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது. மற்றுமொரு சோதனைக்காக (B சாம்பிள்) அவர் இப்போது கத்தார் சென்றுள்ளார்.

இந்த சோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக நிரூபிக்கப்பட்டால் அவர் வாங்கிய தங்கப்பதக்கம் பறிமுதல் செய்யப்படும். இந்நிலையில் கோமதி மாரிமுத்து அவர் மீதான குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கையில் ‘ அவர்கள் சொல்லும் ஊக்கமருந்தின் பெயர் கூட எனக்குத் தெரியாது. பி சாம்பிள் முடிவுகளுக்காக காத்திருக்கிறேன். என் மீதான் குற்றச்சாட்டு ஓயும்வரை ஓயமாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments