Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி பயத்தால் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.. ஜோதிமணியை விமர்சனம் செய்த காயத்ரி ரகுராம்..!

Siva
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (07:36 IST)
கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி தோல்வி பயம் காரணமாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என அதிமுக பேச்சாளர் நடிகை காயத்ரி ரகுராம் பிரச்சாரம் செய்தார்.

கரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து நடிகை காயத்ரி ரகுராம் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசிய போது ’கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை, நாடாளுமன்றத்திலும் எதுவும் பேசவில்லை, தற்போது மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடுவதால் அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது, அதனால் தனது பிரச்சாரத்தின் போது நீலி கண்ணீர் வடிக்கிறார் என்று தெரிவித்தார்.

கரூரில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று தெரிந்துதான் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார் என்றும், அண்ணாமலை கோவை தொகுதிகளிலும் வெற்றி பெறப் போவதில்லை என்றும் அவர் மீண்டும் கர்நாடக மாநில பேச்சி சென்று விடுவார் என்றும் தெரிவித்தார்

அதிமுக ஆட்சியில் பெண்களுக்காக நல்ல திட்டங்களை கொண்டு வந்தோம், ஆனால் திமுக அரசு அதை நிறுத்திவிட்டு வெறும் 30% பெண்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கி ஏமாற்றி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை நீட் தேர்வை ரத்து செய்ய எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments