Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோர விபத்தை ஏற்படுத்திய பரங்கிமலை ரயில் நிலைய தடுப்புச் சுவர் இடிப்பு

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (15:55 IST)
சமீபத்தில் சென்னை பரங்கிமலையில் ரயில் நிலையத்தில் விபத்து ஏற்பட்டு பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டது.

 
கடந்த மாதம் 24ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் தொங்கிக் கொண்டு பயணித்த சிலர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவம் சென்னை பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததன் காரணமாக கூட்ட நெரிசல் அதிகளவில் இருந்தது. வழக்கமாக செல்லும் பாதையை விட்டு விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் மின்சார ரயில் சென்றது.
 
இதுவே விபத்து ஏற்பட முக்கிய காரணம். விபத்து ஏற்பட காரணமாய் இருந்த தடுப்புச் சுவர் இடிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் உள்பட பலரின் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் அந்த தடுப்புச் சுவரை இடிக்க உத்தரவு பிறப்பித்தார்.
 
அதன்படி பரங்கிமலை ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் இருந்த அந்த தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments