Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ரயில்கள் வழக்கம்போல் ஓடும்: தென்னக ரயில்வே

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (20:39 IST)
கஜா புயல் காரணமாக ஒருசில ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், ஒருசில ரயில்கள் வேறு மார்க்கத்தில் மாற்றிவிடப்பட்டும் இருந்த நிலையில் நாளை முதல் ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல் ஓடும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறையின் பொதுமேலாளர் குல்ஷேஸ்த்ரா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'கஜா புயலால் 9 விரைவு ரயில்கள், 14 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டிருந்தன. மேலும் திருச்சி, மதுரை ரயில் கோட்டங்கள் கஜா புயலால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன. பாதிப்பு அடைந்த பகுதிகள் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்த மீட்புப்பணிகள் இன்று இரவுடன் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவை நாளை காலை முதல் வழக்கம்போல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வழக்கமான ரயில் பிரயாணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments