Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது.. என்ன காரணம்?

Siva
வியாழன், 25 ஏப்ரல் 2024 (15:38 IST)
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரையில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று தொற்று நோயை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அந்த ஆலையை மூட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தனது ஆதரவாளர்கள் 200 பேருடன் திடீரென சாலை மறியல் செய்தார்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடும் படி கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் ஆர்பி உதயகுமார் போராட்டத்தை கைவிட மறந்து விட்டதை அடுத்து அவரும் அவருடைய ஆதரவாளர் 200 பேரும் கைது செய்யப்பட்டனர் கேரளாவை சேர்ந்த உரத் தொழிற்சாலை இறைச்சி கழிவுகளை உரமாக மாற்றும் பணியை செய்து வரும் நிலையில் அந்த தொழிற்சாலை காரணமாக சுற்றி உள்ள கிராமத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments