Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாராயம் காய்ச்சுபவருக்கே நிவாரணம் கொடுக்கும் கோமாளி அரசு: ஜெயகுமார் விமர்சனம்..!

Webdunia
புதன், 17 மே 2023 (12:11 IST)
சாராயம் காய்ச்சுபவருக்கே நிவாரண உதவி கொடுக்கும் கோமாளி அரசுதான் தற்போது நடைபெற்று வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 
 
சாராயம் காச்சுபவர்களை கைது செய்து தண்டிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கோமாளி அரசாக இந்த அரசு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஏற்கனவே தந்தை மகன் ஆகிய இருவரையும் மாற்றுத்திறனாளி ஒருவர் உலகக் கோப்பையை வென்றதாக ஒரு டூப்ளிகேட் கோப்பையை காண்பித்து ஏமாற்றினார். அதேபோல் தற்போது சாராயம் காய்ச்சுபவர் சாராயம் குடித்ததாக நிவாரண உதவி தொகை பெற்றுள்ளார் என்றும் இப்படிப்பட்ட கோமாளிகள் மற்றும் அறிவில்லாதவர்கள் ஆட்சி தான் தற்போது நடைபெற்று வருகிறது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார் 
 
பல்பீர்சிங் வழக்கை விசாரிப்பதற்காக அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இப்போது அதே அமுதா ஐஏஎஸ் தான் உள்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அப்போது அந்த அறிக்கையை எந்த லட்சணத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments