Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ 3 லட்சம் பணம் கொள்ளை

Webdunia
புதன், 8 ஜூலை 2015 (05:00 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை வீட்டில் 30 பவுன் நகை,ரூ.3 லட்சம் பணம், ஒரு கிலோ வெளிப் பொருட்கள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
சென்னை, தாம்பரம் அருகே சேலையூர், மாடம்பாக்கம் பிரதான சாலையில் தேவராஜ் நகரில் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை வசித்து வருகிறார்.
 
இந்த நிலையில், இவர் தனது குடும்பத்தினருடன் மதுராந்தகத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. படுக்கை அறை அருகே இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 பவுன் நகைகள், மூன்று லட்சம் ரொக்கப் பணம், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் போன்றவற்றை கொள்ளயைடித்துச் சென்றது தெரிய வந்தது.
 
இது குறித்து, சேலையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் போரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
 
மேலும், பரங்கிமலை துணை ஆணையர் அவினாஷ்குமார், சேலையூர் உதவி ஆணையர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments