Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.அழகிரி மனைவி காந்தி அழகிரி மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2015 (02:20 IST)
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீதான  நில முறைகேடு வழக்கை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் ராமமூர்த்தி என்பவரின் குடும்பத்திற்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி முறைகேடாக வாங்கியதாகக் கூறி, ராமமூர்த்தியின் மனைவி ராஜேஸ்வரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
 
அதன் பேரில், மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி காந்தி அழகிரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனு, நீதிபதி சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலம் தொடர்பான வழக்கில் காந்தி அழகிரி மீது புகார் அளித்த ராஜேஸ்வரி சமாதானமாகச் செல்வதாகக் கூறியதை அடுத்து, காந்தி அழகிரி மீதான வழக்கை நீதிபதி ரத்துச் செய்து உத்தரவிட்டார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments