Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran
திங்கள், 11 நவம்பர் 2024 (13:19 IST)
வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தற்போது தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மியான்மர் கடல் பகுதியில் இருக்கும் காற்று சுழற்சி வடகிழக்கு காற்றை தடை செய்வதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நவம்பர் 6 அல்லது 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டு, அதன் பிறகு 8 அல்லது 9ஆம் தேதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் இப்போது வரை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை என்றும், மூன்று முறை காற்று தாழ்வு பகுதி தள்ளிப்போனதற்கு மியான்மர் கடல் பகுதிகளில் இருக்கும் காற்று சுழற்சி, காற்றை தடை செய்வதால் தான் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும், அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments